Naankooda Inda Ooru Aaludhan |
---|
தந்தானா தானனன்னானே தந்தானே
தந்தானா தானனன்னானே தந்தானே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்
சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை
நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்
மேகங்கள் மூடினா மின்னல்கள் தாக்கினா
ஆகாயம் அஞ்சிடாது ஹேய்
கோடைகள் வந்ததால் காய்கின்ற வெய்யிலால்
கடல் நீரும் வத்திடாது
வீரன் தீரன் சூரன் தான்டா
யாருக்கும் கைக் கட்டி நிக்காதவன்
எப்போதும் இப்படி தப்பிச்சா எப்படி
என்னாகும் பாத்துக்க இந்த நேரம்
ஆத்தாளின் மேலத்தான் வச்சேனே ஆணைதான்
தூளாகி போகுமோ அஸ்திவாரம் ஹேய்
நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்
சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை
நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்ஹேய்
சுட்டாலும் சங்குதான் சூடேற இங்குதான்
மென்மேலும் வெண்மை ஆகும்
எப்போதும் நீதிதான் தப்போடு மோதிதான்
பிற்பாடு வெற்றி காணும்
காலம் நேரம் கூடும்போது
தன்னாலே வெல்லாதோ தர்மங்களே ஹேய்
மாயங்கள் உன்னிடம் ஞாயங்கள் என்னிடம்
என்னை நீ வீழ்த்திட எண்ணலாமா
மர்மங்கள் உன்னிடம் தர்மங்கள் என்னிடம்
முட்டாளே வம்புகள் பண்ணலாமா
சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை
நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்
சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்
என்னை விட்டு இன்னும் போகலை
அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்
இப்ப கூட நெஞ்சில் ஆறலை
நான் கூட இந்த ஊரு ஆளுதான்
எல்லாமே நானறிஞ்ச பேருதான்ஹேய்
தந்தானா தானனன்னானே தந்தானே
தந்தானா தானனன்னானே தந்தானே