Nadagamellam Kanden

Nadagamellam Kanden Song Lyrics In English


நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே

நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே

தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா
தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே
உங்கள் அன்பால் நேரிலே
கண்ணா வாழ்விலே
உங்கள் அன்பால் நேரிலே

தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா வாழ்விலே

கன்னிப் பருவம் என்னும்
கட்டழகுத் தேரினிலே
ஆஆஆஆஆஆஆஆஆ
ஹாஆஅஆ
என்னையே ஆட்கொள்ள
இசைந்து வந்த மணவாளா
ஆஆஆஆஆஆஆஆஆ

அன்னம் நடை பயில
அசைந்து வரும் பூங்கொடியே
ஆஆஅஆஆஆஆஆஆ
அன்னம் நடை பயில
அசைந்து வரும் பூங்கொடியே
ஏஏஏஏஏஏஏ
உன்னழகைப் பார்த்திருக்கும்

கண்ணே
சுவாமி

உன்னழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே


அலைபாயும் தென்றலாலே
சிலைமேனி கொஞ்சுதே
அலைபாயும் தென்றலாலே
சிலைமேனி கொஞ்சுதே

கலைமாதைக் கண்டதாலே
நிலைமாறிக் கெஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே
நிலைமாறிக் கெஞ்சுதே

வளர்க் காதல் அன்பினாலே
வரும் வார்த்தை கொஞ்சமா
வளர்க் காதல் அன்பினாலே
வரும் வார்த்தை கொஞ்சமா

மலர் போன்ற உன்னைக் கண்டால்
கவி பாடப் பஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால்
கவி பாடப் பஞ்சமா

இருவர் : ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே
ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே

இருவர் : ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே