Nadagamellam Kanden |
---|
நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா
தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே
உங்கள் அன்பால் நேரிலே
கண்ணா வாழ்விலே
உங்கள் அன்பால் நேரிலே
தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா வாழ்விலே
கன்னிப் பருவம் என்னும்
கட்டழகுத் தேரினிலே
ஆஆஆஆஆஆஆஆஆ
ஹாஆஅஆ
என்னையே ஆட்கொள்ள
இசைந்து வந்த மணவாளா
ஆஆஆஆஆஆஆஆஆ
அன்னம் நடை பயில
அசைந்து வரும் பூங்கொடியே
ஆஆஅஆஆஆஆஆஆ
அன்னம் நடை பயில
அசைந்து வரும் பூங்கொடியே
ஏஏஏஏஏஏஏ
உன்னழகைப் பார்த்திருக்கும்
கண்ணே
சுவாமி
உன்னழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே
அலைபாயும் தென்றலாலே
சிலைமேனி கொஞ்சுதே
அலைபாயும் தென்றலாலே
சிலைமேனி கொஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே
நிலைமாறிக் கெஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே
நிலைமாறிக் கெஞ்சுதே
வளர்க் காதல் அன்பினாலே
வரும் வார்த்தை கொஞ்சமா
வளர்க் காதல் அன்பினாலே
வரும் வார்த்தை கொஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால்
கவி பாடப் பஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால்
கவி பாடப் பஞ்சமா
இருவர் : ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே
ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
இருவர் : ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே