Nalam Ketka |
---|
நலம் கேட்க வந்தாயோ
ஹோஓஓஒஓஒ
இல்லை சுகம் காண வந்தாயோ
முகம் பார்க்க வந்தாயோ
இல்லை என் கதைக் கேட்க வந்தாயோ
என் கதைக் கேட்க வந்தாயோ
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை
கண்ணீரில் கதை எழுதி
சொன்னாலும் புரியவில்லை
கண்ணீரில் கதை எழுதி
சொன்னாலும் புரியவில்லை
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை
மாலையிட்ட பாவியிடம்
மஞ்சளுக்கு மகிமையில்லை
மானமுள்ள பாவையென
வாழ ஒரு வாழ்க்கை இல்லை
கட்டிலுக்கு கடன் கொடுத்தாள்
தொட்டிலுக்கு விலைக் கொடுத்தாள்
கட்டளையில் பிறந்த பிள்ளைக்
காவல் காண வாழுகின்றாள்
கட்டளையில் பிறந்த பிள்ளைக்
காவல் காண வாழுகின்றாள்
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை
குங்குமத்தில் வாழ்ந்திருந்தால்
மண்டபத்தில் வேலை இல்லை
கோவிலுக்குள் தெய்வமில்லை
வாசலுக்கு வெளியில் வந்தாள்
பொட்டு வைத்து அலங்கரித்தாள்
புன்னகையில் பொய் வளர்த்தாள்
பட்டவரை போதுமென்று
பாட்டு பாட சபை புகுந்தாள்
பாட்டு பாட சபை புகுந்தாள்
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை