Nalla Kaalam Poranthachu

Nalla Kaalam Poranthachu Song Lyrics In English


வேர்வைக்கு கூலி இங்கே
ஆஆஆஆ
கண்ணீராய் போனதடா
ஆஆஆஆ
ஏழெலும்பு ஏறி இங்கே ஒரெலும்பாய் ஆனதடா
ஆஆஆஆ
கூலி செஞ்ச மக்களுக்கு காலம் இனி மாறுமடா
காய் காய்ச்ச மேனியிலே காயம் இனி ஆறுமடா

நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு

ஏழை சொன்ன பேச்சு இங்கு அம்பலம் ஏறலாச்சு
ஊரையெல்லாம் ஏய்ச்சு சிலர் பொழைச்ச காலம் போச்சு

கொலவ இழுங்க கும்மிய கொட்டுங்க
வயசுப் பொண்ணுங்க வாங்க
பாடம் படிச்சவ நாலும் தெரிஞ்சவ
ஊருக்குள் வந்துட்டா வாங்க

கொலவ இழுங்க கும்மிய கொட்டுங்க
வயசுப் பொண்ணுங்க வாங்க
பாடம் படிச்சவ நாலும் தெரிஞ்சவ
ஊருக்குள் வந்துட்டா வாங்க

நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு

நம்ம ஆதி சனத்த காவல் காக்க இல்லையே வேலி
இங்கே மிச்சமாக உள்ளதெல்லாம் கட்டின தாலி
நம்ம ஆதி சனத்த காவல் காக்க இல்லையே வேலி
இங்கே மிச்சமாக உள்ளதெல்லாம் கட்டின தாலி

ஊருக்குள்ளே வந்து சேர்ந்தா உத்தம சீலி
இனி பத்திரமா பாதுகாப்பா பத்ரகாளி
ஊருக்குள்ளே வந்து சேர்ந்தா உத்தம சீலி
இனி பத்திரமா பாதுகாப்பா பத்ரகாளி
உழுத நிலத்தில் அழுது புரண்டு விடியலையே காலம்
உழைச்சு களைச்சு காய்ச்ச கைகள் நாளை உலகை ஆளும்


உழுத நிலத்தில் அழுது புரண்டு விடியலையே காலம்
உழைச்சு களைச்சு காய்ச்ச கைகள் நாளை உலகை ஆளும்

நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு

காலகாலமாக நாம பட்டது போதும் இங்க
வேறொருத்தன் நிலத்தில் வேர்வ விட்டது போதும்
காலகாலமாக நாம பட்டது போதும் இங்க
வேறொருத்தன் நிலத்தில் வேர்வ விட்டது போதும்

தேவி சொல்லும் வார்த்தை இங்கே கட்டளை ஆகும்
அதைக் கேட்டு ஒண்ணு சேரவேணும் கெட்டது மாறும்
தேவி சொல்லும் வார்த்தை இங்கே கட்டளை ஆகும்
அதைக் கேட்டு ஒண்ணு சேரவேணும் கெட்டது மாறும்

கொதிச்சு கெடக்கும் கோபம் திரண்டு பழைய கதவ ஒடைக்கும்
இளைய நெருப்பு எரியும்போது புதிய வெளிச்சம் கெடைக்கும்
கொதிச்சு கெடக்கும் கோபம் திரண்டு பழைய கதவ ஒடைக்கும்
இளைய நெருப்பு எரியும்போது புதிய வெளிச்சம் கெடைக்கும்

நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு