Nalla Samsaram Vaaithadharkku |
---|
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதம்மா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
வான் பார்த்ததே நீ பார்த்திட
சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று
நீர் வார்த்ததும் உண்டானதே
முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று
ஆறேழு மாதங்கள் போனால்
ஆராரோ பாட்டிங்கு கேட்கும்
ஆவாரம் பூப் போன்ற கண்ணால்
அப்பாவை என் பிள்ளை பார்க்கும்
நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்
பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்
ஒன்றிரண்டு வேண்டும் என்று
உன்னை நான் கேட்டேன்
சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொன் மானையும் செம்மீனையும்
கண்ணில் கண்டேன்
உந்தன் கண்ணில் கண்டேன்
பாலாற்றையும் தேனாற்றையும்
உன்னில் கண்டேன்
கண்ணே உன்னில் கண்டேன்
உன்னோடு நான் வாழும் வீடு
ஆனந்தப் பூப் பூக்கும் காடு
அன்றில்கள் ஒன்றான கூடு
ஆகாது வேறேதும் ஈடு
தாரம் வந்தாள்
கொஞ்சும் தென்றல் என்று
பிள்ளை வந்தான்
வண்ண முல்லை என்று
பெண்ணரசி பொன்னரசி
உன்னைப் போல் ஏது
சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
உந்தன் சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு