Nalla Samsaram Vaaithadharkku

Nalla Samsaram Vaaithadharkku Song Lyrics In English


நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதம்மா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை

நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு

வான் பார்த்ததே நீ பார்த்திட
சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று

நீர் வார்த்ததும் உண்டானதே
முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று

ஆறேழு மாதங்கள் போனால்
ஆராரோ பாட்டிங்கு கேட்கும்

ஆவாரம் பூப் போன்ற கண்ணால்
அப்பாவை என் பிள்ளை பார்க்கும்

நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்

பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்

ஒன்றிரண்டு வேண்டும் என்று
உன்னை நான் கேட்டேன்

சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பொன் மானையும் செம்மீனையும்
கண்ணில் கண்டேன்
உந்தன் கண்ணில் கண்டேன்

பாலாற்றையும் தேனாற்றையும்
உன்னில் கண்டேன்
கண்ணே உன்னில் கண்டேன்


உன்னோடு நான் வாழும் வீடு
ஆனந்தப் பூப் பூக்கும் காடு

அன்றில்கள் ஒன்றான கூடு
ஆகாது வேறேதும் ஈடு

தாரம் வந்தாள்
கொஞ்சும் தென்றல் என்று

பிள்ளை வந்தான்
வண்ண முல்லை என்று

பெண்ணரசி பொன்னரசி
உன்னைப் போல் ஏது

சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு

உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக

விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு

அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை

உந்தன் சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு