Nallathoru Kudumbam

Nallathoru Kudumbam Song Lyrics In English


நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்

அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க

எங்கள் வீடு
கோகுலம் என் மகன்
தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம்

நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்

அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க

அன்னை என்னும்
கடல் தந்தது தந்தை என்னும்
நிழல் கொண்டது

பிள்ளை செல்வம்
என்னும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்

நன்றி என்னும்
குணம் கொண்டது
நன்மை செய்யும்
மனம் கொண்டது

எங்கள் இல்லம்
என்னும் பேரை கண்ணன்
வளர்ப்பான்

நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்

அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க

வெள்ளம் போல
ஓடுவான் வெண்மணல்
மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத்
தேடுவான்

மாயம் செய்யும்
மகன் வந்தது ஆயர்பாடி
பயம் கொண்டது


அந்த பிள்ளை
செய்யும் லீலை
நானறிவேன்

இந்த பிள்ளை
நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து
எனை வெல்லவும்
கண்ணில் வைத்து
நெஞ்சில் வைத்து
நான் வளர்த்தேன்

நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்

அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க

கோலம் கொண்ட
பாலனே கோவில் கொண்ட
தெய்வமாம் தாயில் பிள்ளை
பாசமே தட்டில் வைத்த தீபமாம்

பாசம் என்று
எதை சொல்வது
பக்தி என்று எதை
சொல்வது

அன்னை தந்தை
காட்டும் நல்ல சொந்தம்
அல்லவா

பிள்ளை என்னும்
துணை வந்தது உள்ளம்
எங்கும் இடம் கொண்டது

இல்லம் கண்டு
தெய்வம் தந்த செல்வம்
அல்லவா

நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்

அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க