Nallavana Kettavana

Nallavana Kettavana Song Lyrics In English


டேய் நிறுத்துங்கடா
எப்போ பாா்த்தாலும் தண்ணி
போட்டு எங்களையே திட்டுறீங்க
நீங்க என்ன யோக்கியமா

ஏ நல்லவனா
கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான்
தவிக்கிறாடா பொம்பள

அட ஆம்பளையில்
உத்தமன காணல இனி
பூமியிலே பொறப்பான்னு
தோணல

அட எவனுக்குமே
பொண்ண மதிக்க தெரியல
அட எங்க மேல என்ன
கோவம் புரியல

ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

பொண்ணுங்கள
எப்போதுமே போத பொருளா
நெனைக்குறான் மானே தேனே
மயிலேனுதான் பொய்யா
சொல்லி கவுக்குறான்

காதலையும்
காமத்தையும் ஒன்னா
தானே நெனைக்குறான்
பாவம்னு இறங்கிப் போனா
பட்டா போட்டு குதிக்குறான்

பொண்ணுங்களே
இவன் எப்போதுமே தினம்
கட்டிலுக்கு மட்டும்தானே
லாயக்குனு நெனைக்குறான்

காரியந்தான் அட
முடிஞ்சிச்சினா அட அடுத்த
பொண்ண தேடி அவன் நாய
போல அலையுறான்

ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

ஹே ஹே
நிறுத்துமா நீ யாரு
எங்க இருந்து வந்திருக்க
இருவது வருசம்
ஜெயில்ல இருந்திட்டு
வாறேன்டா
அதான் உனக்கு
பொண்ணுங்கள பத்தி
தெரியல இப்போ கேளு

பொண்ணுங்கள
ஏன் படைச்ச கடவுளே
எங்க நிம்மதிதான்
போயிடிச்சே கடவுளே


அவ கண்ணு
ரெண்டும் நல்ல பாம்பா
கடவுளே அவ பார்த்தா
விஷம் ஏறுதடா கடவுளே

அவ சிரிப்பு கூட
தூக்கு கயிறு கடவுளே
அதுல மாட்டிக்கிட்டு
தொங்குறோமே கடவுளே

ஆம்பளைங்க
ஆட்டத்ததான் பொண்ண
வச்சி முடிக்கிற நீ இந்த
பொண்ணுங்கள படைச்சதாலே
மாட்டிகிட்டு தவிக்கிற நீ

ஆம்பளைக்கு
எப்போதுமே பொம்பளதான்
சகுனிடா எப்போ என்ன
செய்வாளோன்னு உத்து
நீயும் கவனிடா

காரு பணம்
இருந்துச்சின்னா கால
கூட புடிக்குறா காதலுன்னு
சொல்லி சொல்லி
பாக்கெட்டையும் கரைக்குறா

முள்ளா குத்தும்
பொண்ணுங்கள அட பூவுன்னு
சொன்ன கவிஞர்கள அட தூக்கி
போட்டு மிதிங்கடா

அடங்காத பொண்ணுங்கள
அட தப்பா வளர்த்த அப்பாக்கள
டேய் சாாி மச்சான் அம்மாக்கள
கட்டி வச்சி அடிங்கடா

ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

ஏ நல்லவனா
கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான்
தவிக்கிறாடா பொம்பள

ஏய் இங்க பாரு மா
ஒழுங்கா போயிடு இல்ல
உன்னைய வெட்டிட்டு நாங்க
ஜெயிலுக்கு போயிருவோம்