Nallavar Kuralukku |
---|
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்
கேட்கிறேன்கேட்கிறேன்கேட்கிறேன்
மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
நல்ல பனி போல் உருகும் குணமிருந்தால்
எந்த பகைவரும் வீழ்ந்திட காணலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
சூடலாம்சூடலாம்சூடலாம்
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
இரைகளை விரும்பி இரவு பகல்
சில பறவைகள் திரியும் காட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
கூடுமோகூடுமோகூடுமோ
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
ஆளலாம்ஆளலாம்ஆளலாம்
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே