Nalungu Paadava |
---|
நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ வா வா
நலங்கு பாடவா பாடவா ஆ வா வா
மாளிகையின் வாசலையே
திறந்து வைப்பாங்க
பூ மாலை போட்டு வரவேற்க
காத்திருப்பாங்க
வணக்கம் சொல்வாங்க
விருந்து வைப்பாங்க
வணக்கம் சொல்வாங்க
விருந்து வைப்பாங்க
வாரம் மாதம் வருஷம்
பார்த்து வாழ்த்திடுவாங்க
நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ வா வா
பாசமென்ற கூட்டுக்குள்ளே
பூட்டி வைப்பாங்க
உன்னை படமெடுத்துப்
பேரெழுதி மாட்டி வைப்பாங்க
காவல் நிப்பாங்க
கடமை செய்வாங்க
காவல் நிப்பாங்க
கடமை செய்வாங்க
காலை மாலை நேரம்
பார்த்து காத்திருப்பாங்க
நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ வா வா
சீர் சுமந்து மாமன்
எங்கே வருகிறான்
செல்வமகள் உனது கையைத் தொடுகிறான்
உற்ற வேளை நெருங்குது
கெட்டிமேளம் முழங்குது
உனது வாழ்வில் புதிய பாடம் தொடங்குது