Nalveenai Naatham |
---|
நல் வீணை நாதம் என்னுள்ளம் கேட்கும்
பொல்லாத சோகம் என்னோடு போகும்
நல்லோரின் வாழ்த்து பொய்யாக ஆச்சே
பொல்லோரின் நீதி மெய்யாகி போச்சே
நீரின்றி வாழ்கின்ற நீராம்பல் இங்கே
வேரொடு நாம் கண்ட இன்பங்கள் எங்கே
பண்பாடும் வானம்பாடிகள் அன்று
பாடாத வானம்பாடி இன்று
அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே
வாழ்க்கையே புதிரானதே
இது ஏனென்று நீ சொல்வாயோ
நாளுமே துயரானதே
பழி பாவங்கள் சுமையானதே
அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே