Nam Vaazhvenum Solaiyil |
---|
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
வாழ் வெலாம் இன்பமயம் தானே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே ஆஹா
மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
மையலினால்
மதன் வில்லை வெல்லுவோம்
மனதிலே
ஒரு எல்லை இல்லையே
இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
வெண்மதி பொழியும்
தன் நிலவதனில்
மிதந்து மகிழ்வோமே
மெய் மறந்து அணைவோமே