Nan Parthathile |
---|
நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்
நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்
நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்
எந்தக் கலைஞனும்
அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப்
பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும்
அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம்
செல்லும்
நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்
இடையோ இல்லை
இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல
வளையும்
சின்னக்
குடை போல் விரியும்
இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள்
திருமுகம் மேலே
குளிர்ப் புன்னகை
வருவதினாலே நிலவோ
மலரோ எதுவோ
நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்
நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்
ஒரு நாள் இல்லை
ஒரு நாள் வந்து அவள் தான்
சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே
என்று நினைத்தாள்
இன்று கண்ணால்
சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன்
முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம்
பெறுவாளோ கனவோ
நனவோ எதுவோ
நான் பார்த்ததிலே
உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன்
நல்ல அழகன் என்பேன்
நான் கேட்டதிலே
உன் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்
நான் பார்த்ததிலே
உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன்
நல்ல அழகன் என்பேன்