Nandhavana Kuyile

Nandhavana Kuyile Song Lyrics In English


நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
பிப்பீ பீப்பீப்பீ
பிபி பீப்பீ பீப்பீப்பீ

நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு

நடந்ததெல்லாம் கனவுதான்
கனவுக்கு ஏன் நீ அழுதாய்
நீ அழுதாய்
உதிர்ந்ததெல்லாம் சருகுதான்
வசந்த மகள் ஏன் அழுதாய்
எவரோடு எவர் வாழ்க்கை
அதை ஆண்டவன் எழுதி வைத்தான்
உறவென்ன வரவென்ன
அதை அவனே நடத்தி வைப்பான்
வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும்
புரிந்து கொள் கண்ணே
வீண் சோகம் ஏனம்மா

நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு


நல்லதையே நினைக்கலாம்
நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு
சென்றதெல்லாம் மறக்கலாம்
இன்னும் இங்கே உறவிருக்கு
இது தேவன் அரசாங்கம்
இதில் யாருக்கும் துன்பம் இல்லை
அலை பாயும் மனம் தானே
இந்த மனிதற்கு பெரும் தொல்லை
தோளில் மாலை சூடவில்லை
சூடாத மாலை வீழ்ந்தால்
சோகம் ஏனம்மா

நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் ஹோய் குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் ஹோய் குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு

நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு