Nandhavanam Poothirukkudhu

Nandhavanam Poothirukkudhu Song Lyrics In English


அழகென்ற விருந்து வைத்தாள்
இயற்கை அன்னை
அதைப் பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை
இளகாத இள மனதை இளக வைத்து
இன்பத்தை என்னோடு தவழ வைத்து

நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா

நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்

பூவோட பூங்காற்று
பூபாளம் பாடாதோ அது ஏனம்மா
புரியாதோ என் கேள்வி
பதில் சொல்லக் கூடாதோ நீ தானம்மா
பச்சைப் பசும் புல்வெளி முத்து மணி நீர்த் துளி
பச்சைப் பசும் புல்வெளி முத்து மணி நீர்த் துளி
ஒன்றை ஒன்று கூடிக் கொண்டாடும்
அது அன்புக்கு விளக்கம்
ஒட்டிக் கொண்டு நாளும் பண் பாடும்
உறவினில்தான் உலகிருக்கும்
புரிந்தால் அதில் எனக்கொரு பலன் கிடைக்கும்

நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா


நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்

கண் மூடித் தூங்காமல்
கனவொன்று கண்டேனே அதை என்னென்பேன்
சொல்லாமல் புரியாமல்
தடுமாறி நின்றேனே அதை என்னென்பேன்
காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது
காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது
சொல்லிக் கொள்ளும் வார்த்தை எல்லாமே
மனச் சிறையினில் இருக்க
சிக்கிக் கொண்டு நானும் நின்றேனே
திறப்பு விழா நடந்து விட்டால்
மனமோ தினம் வானத்தில் பறந்திருக்கும்

நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா

நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்