Nandhavanam Poothirukkudhu |
---|
அழகென்ற விருந்து வைத்தாள்
இயற்கை அன்னை
அதைப் பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை
இளகாத இள மனதை இளக வைத்து
இன்பத்தை என்னோடு தவழ வைத்து
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்
பூவோட பூங்காற்று
பூபாளம் பாடாதோ அது ஏனம்மா
புரியாதோ என் கேள்வி
பதில் சொல்லக் கூடாதோ நீ தானம்மா
பச்சைப் பசும் புல்வெளி முத்து மணி நீர்த் துளி
பச்சைப் பசும் புல்வெளி முத்து மணி நீர்த் துளி
ஒன்றை ஒன்று கூடிக் கொண்டாடும்
அது அன்புக்கு விளக்கம்
ஒட்டிக் கொண்டு நாளும் பண் பாடும்
உறவினில்தான் உலகிருக்கும்
புரிந்தால் அதில் எனக்கொரு பலன் கிடைக்கும்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்
கண் மூடித் தூங்காமல்
கனவொன்று கண்டேனே அதை என்னென்பேன்
சொல்லாமல் புரியாமல்
தடுமாறி நின்றேனே அதை என்னென்பேன்
காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது
காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது
சொல்லிக் கொள்ளும் வார்த்தை எல்லாமே
மனச் சிறையினில் இருக்க
சிக்கிக் கொண்டு நானும் நின்றேனே
திறப்பு விழா நடந்து விட்டால்
மனமோ தினம் வானத்தில் பறந்திருக்கும்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்