Nandri Solla Vendum |
---|
நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
துன்பமான இன்பம்
தொடர வேண்டுமே
திருடனையே பிடிச்சிருக்கு
புது தினுசா இது இருக்கு
கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு
கூட்டி போடத் தெரிஞ்சிருச்சு
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு
ரெண்டும் சேர்ந்து ஒண்ணாச்சு
நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
துன்பமான இன்பம்
தொடர வேண்டுமேஏஏஏ
எனது விழியிலே
ஒரு புதிய தரிசனம்
எனது மனதிலே
ஒரு மழலை குயில் வனம்
மனது பறவை
சிறகில் ஒளிந்த ரகசியம்
திறந்த வெளியில்
விரிந்து பறக்குதே
இதய வயலில் விதைத்த
குறுவை முளைவிட
அமுத மழைக்கு கிடந்து தவிக்குதே
தூங்கிடாத கண்ணோரம்
தேன் தெளிக்கும் சொப்பனங்கள்
பூ நிலாவும் ராத்திரியும்
நமக்களிக்கும் அர்ப்பணங்கள்
அசையும் இலையும்
துடிக்கும் இசையும்
இதயம் உனக்குள்
பரவி துடிக்குதே
இருவர் : நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
இருவர் : துன்பமான இன்பம்
தொடர வேண்டுமே
கவிதை மொழியிலே
மனம் கதைகள் படித்திடும்
இடையின் வளைவிலே
விரல் எழுதிப் பழகிடும்
அளவு கடந்து
அணைகள் உடைந்து
வழிவிடும்
அலைகள் எனக்குள் எனக்குள் மிதக்குதே
இணைந்து இணைந்து
பறந்து திரியும் பறவைகள்
சிறகைத் திறந்து
எனக்குள் விரிக்குதே
வாங்கிடாத உள்மூச்சு
உன்னை வாங்கச் சொல்கிறதே
மூங்கிலோடு பூங்காற்று
நம்மை தீண்டிச் செல்கிறதே
உலகை மறந்து உனது மடியில்
புதிய இதயம் பிறந்து சிரிக்குதே
நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
துன்பமான இன்பம்
தொடர வேண்டுமே
திருடனையே பிடிச்சிருக்கு
புது தினுசா இது இருக்கு
கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு
கூட்டி போடத் தெரிஞ்சிருச்சு
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு
ரெண்டும் சேர்ந்து ஒண்ணாச்சு
நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
துன்பமான இன்பம்
தொடர வேண்டுமேஏஏஏ