Nane Un Kaathali |
---|
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
நான்தானே உன் பிருந்தாவனம்
வா வா கண்ணனே
நான்தானே உன் புல்லாங்குழல்
வா வா மன்னனே
தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்
ஹேய் தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்
வானவில்லை போலவே
பெண் வண்ணமே
தேனை அள்ளி ஊட்டுதே
உன் கன்னமே
ஹா நீலவண்ண
கண்ணனே என் மன்னனே
நீங்கிடாமல் கூடவா
என் தேவனே
ஜாதிப்பூ பெண் போல்
முன்னாலே வந்து
ஆடிப் பாடுதே
உள்ளூறும் தேனை
மோகம் கொண்டுதான்
தன்னாலே வந்து ஊட்டுகின்றதே
அட வாவாவாவா
என் காதல் ராஜா
வாவாவாவா காதல் ராஜா
வண்டு போல பூவைத் தேடு
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
ஆச நச்சரிக்குது
அது தானா தத்தளிக்குது
ஹேய் மோகம்
கொக்கரிக்குது அது லேசா
எச்சரிக்குது ஹாஹா
முங்கி முங்கி முத்தெடுத்து
என்னைக் கொஞ்சம் தொட்டெடுத்து
அள்ளிக் கொள்ளு ராஜராஜனே
ஆஹா ஆஹா
உன்னைக் கொஞ்சம்
தொட்டுக் கொள்ள
பொன்னப் போல ஒட்டிக் கொள்ள
கண்ணக் காட்டு காதல் தேவியே
வந்ததிப்போ லாபமின்னு
வாங்கிக் கொள்ளுறேன்
வாடிப் புள்ள உன்னைக்
கொஞ்சம் தாங்கிக் கொள்ளுறேன்
மாமா மாமா
அட ஏம்மா ஏம்மா
அட மாமா மாமா
ஏம்மா ஏம்மா
வாசம் பட்டு வாடி நிக்கிறேன்
காலை மாலை
யாவிலும் உன் ஞாபகம்
காதல் ராகம் பாடிடும்
நான் உன்னிடம்
உன்னையன்றி யாரையும்
கண் பார்க்குமோ
உன் போல யாருமே
பெண் ஆகுமோ
உன்னிலே எனை
ஒன்றாகச் சேர்த்து
ஊஞ்சல் ஆடினேன் கண் மூடி
இந்த நெஞ்சிலே
தினம் உன்னோடு
நானும் நாளும் கூடினேன்
நீ வாவா ராணி
நான் காதல் தேனீ
வாவா ராணி காதல் தேனீ
வந்து வந்து அள்ளிக் கொள்ளு
பெண்கள் : நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
பெண்கள் : நான்தானே உன் பிருந்தாவனம்
வா வா கண்ணனே
நான்தானே உன் புல்லாங்குழல்
வா வா மன்னனே
நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி
தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்
ஹேய் தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்
பெண்கள் : நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி