Nari Ondru Sirikindrathu

Nari Ondru Sirikindrathu Song Lyrics In English


நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்
தண்டனை கிடைகின்றது
தண்டனை கிடைகின்றது

நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது

அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள்
படுத்தபின் எழ மாட்டான்
அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள்
படுத்தபின் எழ மாட்டான்
அவனது கணக்கை ஐந்தொகை போட்டு
ஆண்டவன் விட மாட்டான்

பலருக்குச் சில காலம்
எதுவும் சிலருக்கு பல காலம்
பலருக்குச் சில காலம்
எதுவும் சிலருக்கு பல காலம்
எவருக்கும் ஒரு காலம்
உண்மை வெளி வரும் எதிர்காலம்
உண்மை வெளி வரும் எதிர்காலம்

நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது


நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால்
நாடே திரண்டு வரும்
நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால்
நாடே திரண்டு வரும்
நாணயம் போனவன் வாழ்க்கையின் முன்னே
மலையே உருண்டு வரும்

அறையினில் நடந்தாலும்
எதுவும் அம்பலம் ஆகிவிடும்
அறையினில் நடந்தாலும்
எதுவும் அம்பலம் ஆகிவிடும்
அறிவால் அறிந்து விடு
இல்லையேல் அனுபவம் காட்டி விடும்
அனுபவம் காட்டி விடும்

நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்
தண்டனை கிடைகின்றது
தண்டனை கிடைகின்றது

நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது