Natpu

Natpu Song Lyrics In English


புலியும் அவ்வேடனும் புயலும் ஒரு ஓங்களும் புனலும் மடைவாயிலும் புலமும் பெரும் பூட்கையும் புலரும் இருள் வானமும் ஹோ

நட்பாய்

எங்காகிலும் பார்த்ததுண்டோ தீ நீருடன் சேர்ந்தது உண்டோ யார் யாரினை விழுங்குவார் என்பதை சொல்வார் உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தம் தாரம் தம் தம் தம்

கழுத்தெரிய கையிரோடு நட்பாய் கழுகும் ஒரு காலிலியும் நட்பாய் கனவும் ஒரு விழிபுனர்வும் கரம் கூடிய கதை உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தம் தாரம் தம் தம் தம்

பசியாறும் பகைவனைக் கண்டு குரு : மனம் இங்கு மகிழ்வது ஏனோ விழியோர கானல் கண்ணீரில் பொய்யும் மெய்யாகுதோ

தரையில் தன் நிழலினை கொண்டு அதை தேடி அலைவது ஏனோ அறியாமையாலே மண் எங்கும் இன்பம் உண்டாகுதோ

ஈர் எதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல்  எழுதியதோ ஈர் எதிர் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் நழுவியதோ

எங்காகிலும் பார்த்ததுண்டோ தீ நீருடன் சேர்ந்தது உண்டோ யார் யாரினை விழுங்குவார் என்பதை சொல்வார் உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தம் தாரம் தம் தம் தம்


வழிந்தோடும் எரிமலை சாறு கடலோடு கலந்திடும் போது வெளியேறும் ஆவி யார் கொண்ட வெற்றி என்றாகுமோ

கருங்காட்டை கிழித்திடும் ஆறு

மரவேர்கள் அறுத்திடும் போது தடையாகும் பாதை யார் கொண்ட தோல்வி என்றாகுமோ

கேள்வியின் துணையென விடையும் சேர்ந்தே தேடலை தொடர்கிறதோ ஒன்றுக்கும் ரெண்டுக்கும் இடையில் இங்கே முடிவினில் படர்கிறதோ

எங்காகிலும் பார்த்ததுண்டோ தீ நீருடன் சேர்ந்தது உண்டோ யார் யாரினை விழுங்குவார் என்பதை சொல்வார் உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தம் தாரம் தம் தம் தம்

கழுத்தெரிய கையிரோடு நட்பாய் கழுகும் ஒரு காலிலியும் நட்பாய் படையும் அதன் குறிஇலக்கும் உறவாடிய கதை உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தாரதம் தரதம் தரதம் தம் தம் தாரம் தம் தம் தம்

கழுத்தெரிய கையிரோடு நட்பாய் கழுகும் ஒரு காலிலி யும் நட்பாய் களிறும் ஒரு சிற்று எறும்பும் விளையாடிய கதை உண்டோ