Nee Engey – (Pathos)

Nee Engey – (Pathos) Song Lyrics In English


நீ எங்கே
என் நினைவுகள் அங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

நீ எங்கேஏ

பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
மறைவிடம் பார்த்தே வாழ்ந்தாலும்
என் புகலிடம் உனது மடியல்லவா

ஆயிரம் காலம் ஆன பின்னாலும்
வாழும் காதல் உறவல்லவா

நீ எங்கேஏ

நீ அறிவாய் என் வேதனையை
இங்கு நேர்ந்திருக்கும் அந்த சோதனையை
யார் தருவார் மன ஆறுதலை
உந்தன் பார்வைகள் சொல்லும் தேருதலை

மானிடர் எல்லாம் பூமியை தேடி
வாழ வைப்போம் நம் ஆசைகளை


நீ எங்கேஏ

மறந்திடவா உன்னை நான் நினைத்தேன்
மண்ணில் எறிந்திடவா மலர் சரம் தொடுத்தே
பிரிந்திடவா அந்த பாட்டிசைத்தேன்
உயிர் விடை பெறவா இந்த உடல் வளர்த்தேன்

நீ வருவாய் வந்து நிழல் தருவாய் என்று
நம்பிக்கையால் இன்று குரல் கொடுத்தேன்

நீ எங்கே
என் நினைவுகள் அங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

நீ எங்கேஏ