Nee Ennai Vittu |
---|
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே
ஒரு கையில் கோப்பை
மறு கையில் பாவை
எடுத்துக் கொண்டாடு இனிமை பண்பாடு
காலம் பொன் போன்றது
காதல் கண் போன்றது
போனால் என்னாவது
வா வா இன்றாவது
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே
சூரியன் தூங்கியது
இங்கு சந்திரன் தோன்றியது
சூரியன் தூங்கியது
இங்கு சந்திரன் தோன்றியது
ஆயிரத்தில் நீயொருத்தன் தானே
ஆசைக் கொண்டு தேர்ந்தெடுத்தேன் நானே
தித்திக்கின்ற முத்திரைகள் தேனே
திகட்டும் வரைக்கும் திரும்பத் திரும்பத் தா
தத்தை சொல்லும் வித்தையெல்லாம்
மெத்தை வந்தால் காணக் கூடுமே
பூப் பந்து போலிருக்கும்
வண்ணப் பூந்துகில் மேலிருக்கும்
வானகத்து மேனகைக்குத் தங்கை
வார்த்தெடுத்த ஓவியம் போல் மங்கை
இன்பமென்ற வெள்ளமூறும் கங்கை
இரவு முழுவதும் உறவில் மிதக்க வா
ஒன்று தந்தால் நூறு தந்து
நன்றி சொல்லும் நங்கை நானன்றோ
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே