Nee Illaa Aagayam |
---|
நீ இல்லா ஆகாயம்
என் நெஞ்சில் தீ காயம்
ஆகுமே என் ஆயுள் காற்றே
பெண் என்ற
வார்த்தைக்கு ஆண்
என்ற அர்த்தங்கள்
நேர்ந்ததே என் காதல்
நேற்றே
மானே உன்னை
தானே என்றும் கண்ணோடு
கை கோர்த்து காணாமல்
போனேன்
தேனே பூவின்
தேனே காதல் தித்திக்கும்
தீப்பந்தம் எப்போதும் நீதானே
நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே
நீ இல்லா ஆகாயம்
என் நெஞ்சில் தீ காயம்
ஆகுமே என் ஆயுள் காற்றே
பெண் என்ற
வார்த்தைக்கு ஆண்
என்ற அர்த்தங்கள்
நேர்ந்ததே என் காதல்
நேற்றே
என்னை நானே
பார்க்காத நேரம் பெண்ணே
உன்னால் தானே என்னை
கண்டுகொண்டேன்
மண்ணில் மூழ்கும்
வேர் போல நீதானே
எந்தன் நெஞ்சில் ஏனோ
பிண்ணி கொண்டாய்
யார் தானோ
நான் என்று கேட்டால்
நீ சொல்வாய் அன்பே
உன் பாட்டால் உன்
மௌனமே என் தெய்வமே
காற்றோடு கரைகின்ற
கற்பூரம் ஆனேனே
நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே
கண்ணாம் பூச்சி
ஆடாதே பெண்ணே
கண்ணுக்குள்ளே என்னை
பூட்டி வைத்தே காதல் சாவி
போட்டுத் தானே பொம்மை
போல என்னை ஆட்டி வைத்தா
என் இன்பம்
என் சோகம் நீயே
உன் காதல் எனைப்
பெற்ற தாயே
என் போதை
நீ உன் பாதை நான்
கண்ணீரை காணாமல்
நான் வாழ நீ வேண்டும்
நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே