Nee Illaa Aagayam

Nee Illaa Aagayam Song Lyrics In English


நீ இல்லா ஆகாயம்
என் நெஞ்சில் தீ காயம்
ஆகுமே என் ஆயுள் காற்றே

பெண் என்ற
வார்த்தைக்கு ஆண்
என்ற அர்த்தங்கள்
நேர்ந்ததே என் காதல்
நேற்றே

மானே உன்னை
தானே என்றும் கண்ணோடு
கை கோர்த்து காணாமல்
போனேன்

தேனே பூவின்
தேனே காதல் தித்திக்கும்
தீப்பந்தம் எப்போதும் நீதானே

நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே

நீ இல்லா ஆகாயம்
என் நெஞ்சில் தீ காயம்
ஆகுமே என் ஆயுள் காற்றே

பெண் என்ற
வார்த்தைக்கு ஆண்
என்ற அர்த்தங்கள்
நேர்ந்ததே என் காதல்
நேற்றே

என்னை நானே
பார்க்காத நேரம் பெண்ணே
உன்னால் தானே என்னை
கண்டுகொண்டேன்

மண்ணில் மூழ்கும்
வேர் போல நீதானே
எந்தன் நெஞ்சில் ஏனோ
பிண்ணி கொண்டாய்


யார் தானோ
நான் என்று கேட்டால்
நீ சொல்வாய் அன்பே
உன் பாட்டால் உன்
மௌனமே என் தெய்வமே
காற்றோடு கரைகின்ற
கற்பூரம் ஆனேனே

நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே

கண்ணாம் பூச்சி
ஆடாதே பெண்ணே
கண்ணுக்குள்ளே என்னை
பூட்டி வைத்தே காதல் சாவி
போட்டுத் தானே பொம்மை
போல என்னை ஆட்டி வைத்தா

என் இன்பம்
என் சோகம் நீயே
உன் காதல் எனைப்
பெற்ற தாயே

என் போதை
நீ உன் பாதை நான்
கண்ணீரை காணாமல்
நான் வாழ நீ வேண்டும்

நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே