Nee Illaadha Podhu |
---|
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
முதன் முதலில் தொடும் வரை
தினம் நான் ஏங்க
விரல் நுனிகள் படும் வரை
விழிதான் தூங்க
காவியம் பாடும்
காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
எது வரையில் சுகம் என
அதை நான் காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என
அதை நான் சேர்வேன்
ஏங்கிடும் போது
எண்ணம் தாங்காது
இரு மேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
இருவர் : லா லாலால லாலா லாலா லாலா
லலால லலலாலா