Nee Illaadha Podhu

Nee Illaadha Podhu Song Lyrics In English


நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

முதன் முதலில் தொடும் வரை
தினம் நான் ஏங்க
விரல் நுனிகள் படும் வரை
விழிதான் தூங்க

காவியம் பாடும்
காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே

நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

எது வரையில் சுகம் என
அதை நான் காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என
அதை நான் சேர்வேன்


ஏங்கிடும் போது
எண்ணம் தாங்காது
இரு மேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை

நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

இருவர் : லா லாலால லாலா லாலா லாலா
லலால லலலாலா