Nee Illamal Naan Illai |
---|
நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
நான் எத்தனை காலம் மெத்தையின் மீது
ஏங்கியிருப்பேன் தனியாக
கிளி கொத்த வராமல் முத்தியிருக்கும்
அத்தி மரத்து கனியாக
நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
பால் வடித்த பாத்திரத்தை
கையில் ஏந்து
போதை என்னும் சாகரத்தில் கொஞ்சம் நீந்து
தில் தேரா மந்திர் ஹே ஏக் தேவி அந்தர் ஹை
என்னுள்ளம் உன் வீடு நீ உள்ளே வந்தாடு
கண் பட்டதும் என்னை தொட்டதும்
பெண்மை விட்டது நாணம் விளையாடு
ஓர் பாதி எனக்கும் மீதி உனக்கும்
காதல் சுகத்தை பரிமாறு
நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
வாலிபத்து நாடகத்தின் இந்த காட்சி
பார்ப்பதற்கு யாருமில்லை கட்டில் சாட்சி
தும் ஆவோ மேரே பாஸ் தும் தேக்கோ மேரா நாஸ்
நான் வண்ணப் பூச்செண்டு என் கன்னம் கற்கண்டு
என் பட்டுடல் தொட்டு பஞ்சணையிட்டு
கட்டுரை தீட்டு மெதுவாக
அதில் முன்னுரை என்ன முடிவுரை என்ன
சொல்லி முடிப்போம் பொதுவாக
நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை