Nee Irundha |
---|
நீ இருந்த வீடு இப்போ
தவிக்குதே அட தெனமும்
நீயும் செய்யும் சின்ன சேட்டையத்தான்
தேடி மனம் துடிக்கிறதே
நீ தூக்கும் பள்ளிக்கூட பைக்கூட
உன்னப்பத்தி காற்றோடு கதை சொல்லி
வீட்டோட நிக்குதே
நம் வீட்டு டிவி கூட
உன்னோட பேசனுன்னு
பேசாம மூலையிலே
நாளெல்லாம் வாடுதே
தூக்கத்தில் நீ பேசும்
பேச்சத்தான் நான் கேட்க
தூங்காம இருக்கும் என் உசிரே
உலகமே இருண்டதே
உன் முகம் இன்று மறைந்ததே
கடவுளே கருணை செய்
கண் முன்னே வந்து காட்சி செய்
கதிரும் கரைகின்றதே
கால்கள் தேய்கின்றதே
கனவு காணவில்லையே
தூக்கம் மறந்து போனதே
கல்லினுள் சிற்பங்களை
காண நினைத்தோம்
உளியின் வலியினால் பின்னமானதோ
உலகமே இருண்டதே
உன் முகம் இன்று மறைந்ததே