Nee Irundha

Nee Irundha Song Lyrics In English


நீ இருந்த வீடு இப்போ
தவிக்குதே அட தெனமும்
நீயும் செய்யும் சின்ன சேட்டையத்தான்
தேடி மனம் துடிக்கிறதே

நீ தூக்கும் பள்ளிக்கூட பைக்கூட
உன்னப்பத்தி காற்றோடு கதை சொல்லி
வீட்டோட நிக்குதே

நம் வீட்டு டிவி கூட
உன்னோட பேசனுன்னு
பேசாம மூலையிலே
நாளெல்லாம் வாடுதே

தூக்கத்தில் நீ பேசும்
பேச்சத்தான் நான் கேட்க
தூங்காம இருக்கும் என் உசிரே


உலகமே இருண்டதே
உன் முகம் இன்று மறைந்ததே
கடவுளே கருணை செய்
கண் முன்னே வந்து காட்சி செய்

கதிரும் கரைகின்றதே
கால்கள் தேய்கின்றதே
கனவு காணவில்லையே
தூக்கம் மறந்து போனதே

கல்லினுள் சிற்பங்களை
காண நினைத்தோம்
உளியின் வலியினால் பின்னமானதோ
உலகமே இருண்டதே
உன் முகம் இன்று மறைந்ததே