Nee Kaatru Naan Maram

Nee Kaatru Naan Maram Song Lyrics In English


நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்

நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்



நீ அலை
நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான்
நிழல் நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்

நீ கிளை நான்
இலை உன்னை ஒட்டும்
வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

நீ விழி நான்
இமை உன்னை சேரும்
வரைக்கும் நான் துடித்து
இருப்பேன்

நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்

நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்



நீ வானம் நான்
நீலம் உன்னில் நானாய்
கலந்திருப்பேன்

நீ எண்ணம்
நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்

நீ வெயில்
நான் குயில் உன்
வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்

நீ உடை நான்
இடை உன்னை உறங்கும்
பொழுதும் நான் உடுத்திருப்பேன்

நீ பகல் நான்
ஒளி என்றும் உன்னை
மட்டும் சார்ந்தே நான்
இருப்பேன்

நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்

நீ இரவு நான்
விண்மீன் நீ இருக்கும்
வரை தான் நான் இருப்பேன்

நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்