Nee Kettadhu Inbam |
---|
நீ கேட்டது இன்பம்
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ
பேசிப் பேசிப் பலநாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது
அன்பை இழந்தால் லாபம் ஏது
லாபம் ஏது
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ
துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே
துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே
இன்ப மென்றோர் உலகம் தோன்றி
ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ
ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ
தீர்த்திடாதோ
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
வாழ்க்கை இதுதானோ
வாழ்க்கை இதுதானோஓ