Nee Nenaichadhum Mazhayadikkanum |
---|
நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது
பிறர் இஷ்டம் போல் இங்கு வளையாதது
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது
பிறர் இஷ்டம் போல் இங்கு வளையாதது
நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
கேள்வி இல்லாமல் வெளியேறச் சொல்ல
கிள்ளுக் கீரைகள் தொழிலாளர் அல்ல
கேள்வி இல்லாமல் வெளியேறச் சொல்ல
கிள்ளுக் கீரைகள் தொழிலாளர் அல்ல
வேலை நீக்கங்கள் விளையாட்டு என்று
வஞ்சி லேசாக விரட்டாதே இன்று
பிடித்த முயலுக்கு இன்று
நீ மூன்று கால்கள் என்று
எடுத்த முடிவை திருத்திக் கொண்டு
நடப்பது தான் நன்று
நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
கொஞ்சும் கிளியாட்டம் புதுசாக வனப்பு
கோபம் வரும் போது குறையாதோ மதிப்பு
கொஞ்சும் கிளியாட்டம் புதுசாக வனப்பு
கோபம் வரும் போது குறையாதோ மதிப்பு
அன்பின் அடையாளம் அழகே உன் சிரிப்பு
ஆடை இடும் போது அடடா நீ நெருப்பு
பணத்தில் மிதக்கும் படகு
கொஞ்சம் பண்பு தெரிந்து பழகு
மேன்மை மணமும் மென்மை குணமும்
பெண்மைக்கேற்ற அழகு
நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
அந்தி மந்தார பூவாக மலர்ந்து
அல்லி விழியாலே பரிமாறு விருந்து
அந்தி மந்தார பூவாக மலர்ந்து
அல்லி விழியாலே பரிமாறு விருந்து
சொந்தம் உனக்கென்று எளியோரை நினைத்து
வந்து உறவாடு பேதங்கள் மறந்து
இரண்டு வர்க்கம் எதுக்கு
அது இருக்கும் வரையில் வழக்கு
கொடுக்கும் கையும் வாங்கும் கையும்
இணைய வேண்டும் நமக்கு
நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து