Nee Oru Kodi Malar |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல
உண்மையில் உன்னாலே
கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல
உன் புகழ் சொன்னாலே
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்
இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம்
நீராட துடிக்கும் நிலை காண்பாய்
கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில்
நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்
அலைக் கடல் நெஞ்சில் நதியென ஓடி
சங்கமம் ஆகட்டுமே
அவசரம் என்ன அறுவடை காலம்
வருவதை அறியாயோ
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்