Nee Otha Sollu Sollu

Nee Otha Sollu Sollu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி

நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும்
கொண்டாந்து தாரேன் பரிசா

உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும் நீரு நிலமும்
காத்தும் நெருப்பும்
அத விட என்ன பெரிசா பெரிசா

தாயின் முகம் கண்டதில்ல
தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்த பின்னே
நான் வாழ ஆசை பட்டேன்

தாயாக மாறுகிறேன்
தாலாட்டு பாடுகிறேன்
தானானே தனனனனா
தனனனனனனா

நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும்
கொண்டாந்து தாரேன் பரிசா

உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும் நீரு நிலமும்
காத்தும் நெருப்பும்
அத விட என்ன பெரிசா பெரிசா

வெந்து காஞ்ச பொட்டலுல
வேரும் தீஞ்சு நிக்கையில
பிஞ்சு காலில் மழைய கொண்டு
வந்த சாமி நீதானே

அத்து வான காட்டுக்குள்ள
நான் பாராங்கல்லா கிடக்கையில
கோபுரத்து உச்சியில என்ன
ஏத்துன சாமி நீதானே

ஏ கத்தாழையும் செந்தாழையா
ஆனதென்ன உன்னால
உள்ள காத்தாடி தான் நெஞ்சுக்குள்ள
சுத்துதடி தன்னால

பாய் போட்டு தூங்கையில
வாராயே கனவுக்குள்ள
என்னனு கேக்கையில
நநனே நனனன


நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும்
கொண்டாந்து தாரேன் பரிசா

நீ கொடுத்த தண்ணியில
தீர்த்த வாசம் இருக்கும் புள்ள
உன் வார்த்த விசிறிய போல
வெக்கையில் எனக்கு வீசுதடி

அம்ம ஊசி தழும்பு கூட
மாஞ்சி போகும் உண்மையில
அன்பு கூட்டி நீதான் தந்த
முத்த ஈரம் காயாதோ

நீ வெல்ல கட்டி வச்சிருக்க
தொண்ட குழி ஓரத்துல
உன் ஒத்த ஜடை என்ன தொட
கேக்குறியே ஜாடையில

காதல் ஒரு சூதாட்டம் தான்
கூட நின்ன ஞாயம் இல்ல
ஹ்ம்ம்ம்ம்ம்
ஒண்ணா சேர்ந்த தாயும் புள்ள
நநனே நநனே

நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும்
கொண்டாந்து தாரேன் பரிசா

உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும் நீரு நிலமும்
காத்தும் நெருப்பும்
அத விட என்ன பெரிசா பெரிசா
உன் ஒத்த துணை போதும்

தாயின் முகம் கண்டதில்ல
தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்த பின்னே
நான் வாழ ஆசை பட்டேன்

உறவாக வந்தவளா
உயிராக சேர்ந்தவளா
ஆத்தா நீ சாமி போல
சொல்ல போன அதுக்கும் மேல