Nee Paadum Paadal |
---|
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
பண்போடு சேராத
எண்ணங்கள் பாழாகும்
அன்போடு சேராத
ஆசைகள் வீணாகும்
தர்மத்தில் அடங்காத உள்ளம் என்றும்
தள்ளாடி தள்ளாடி துன்பம் கொள்ளும்
ஒரு காவல் ஏது கணவனை பிரிந்தால்
கோவில் ஏது இறைவனை மறந்தால்
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
காலங்கள் நூறாக
காண்கின்ற பண்பாடு
வேதங்கள் நாளோடு
விளைகின்ற நல்வாழ்வு
வேலிக்குள் நான் கண்ட பூந்தோட்டமே
தாலிக்கு நான் தந்த தாத்பர்யமே
இனி காசியோடு கங்கையுமில்லை
ஆசி கூறும் கருணையும் இல்லை
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்