Neelavaana Pandhalin Keezhe |
---|
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
ஆஆஆஆஓ ஓஒ ஓ ஓஒ ஓ
காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
பாடுகின்ற கடலும் நெருப்பும்
படை வரிசையாகுமடா
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
ஆஆஆஆஓ ஓஒ ஓ ஓஒ ஓ
சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
காரியமாய் காற்றும் மழையும்
கடமை செய்யும் ஆட்களடா ஹோய்
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்
இயற்றவில்லை மறு சட்டம்ஓ
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா