Neengum Bothil |
---|
நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில்
ஏதோ சாரலோ
ஏதோ சாரலோ
மூங்கில் மோதி தென்றல் போகும்
போது பாடலோ
போது பாடலோ
தூரம் கூட பாரம் ஏற
காற்றில் மௌனமோ
ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு
நேரம் முடியுமோ
நெருங்கிடும் எண்ணம் வருகையில்
அது விலகிட்டும் விந்தை ஏனடி
கைகளில் யாவும் தருகையில்
அதை இழந்திடும் நிலையில் நானடி
ஒரு பூவில் வாழ்ந்திடும்
வாசனை மறையுதே
என் உயிரில் ஒரு வலி
மென்மையாய் நிறையுதே
காணும் கனவுகள்
வேகமாய் கலையுதே
சுகமான பயணங்கள்
முட்களாய் குத்துதே
அருகினில் நீயும்
இருக்கையிலும் நெஞ்சம்
தனிமையை உணருதே
பிரிந்திடும் என்றும்
தெரிந்திடும் உறவின்
அறிமுகம் கொடுமையே
பழகிய நாட்கள்
தந்த இன்பமோ
அழகிய வானவில்லை போலவே
நீங்கிடும் அந்த நேரம்
வந்ததாலே
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ
பூமழை போல
உந்தன் ஞாபகம்
தீ மழை ஆக
என்ன காரணம்
இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ
அனுபவம் ஒன்று கடந்து போகுமோ
போகும் பாதை போகும்
ஆன போதும் வேண்டுமே
உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை
உன் பார்வை நீளுமே
திரும்பாமல் சென்றிடும் போதும்
உன் நினைவுகள் திரும்புமே
நீ இல்லாத போதும் உன்னை
என்றும் விரும்புமே விரும்புமே விரும்புமே