Neerodum Vaigaiyile |
---|
நீரோடும்
வைகையிலே
நின்றாடும் மீனே
நெய்யூறும்
கானகத்தில் கை
காட்டும் மானே
தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும்
வெண்ணிலவே
தெம்மாங்கு
பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
ஆண் & நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
மகளே உன்னைத்
தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை
வருவாய் என்று
வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு
நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
ஆண் & ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆண் & நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
குயிலே என்று
கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று
தூக்கி வந்தாயே இங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு
முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இரு
முகமும் ஒரு முகத்தின்
வெள்ளமல்லவா
ஆண் & ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆண் & நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
ஆராரோ
ஆரிராரோ