Neethaan En Kanavu |
---|
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
மழையாய் கருணை
பொழிவான் இங்கு அவனே
நீதான் என் கனவு மகனே
ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இது தானே நாம் கண்ட
உண்மை உலகில்
வழிகளை அறியாத
இந்த வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு
என்றும் தோல்விகள் இனி இல்லை
தெய்வம் கை விடுமா
ஏதும் இல்லாதார் வாழ்விலே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
நீதான் என் கனவு மகனே
தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீக்கூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்
கனவுகள் மெய் ஆகும்
அது கற்பனை கிடையாது
அழைத்திடும் திசை எங்கும்
இனி நீ வந்து விளையாடு
காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
நீதான் என் கனவு மகனே