Neethane Naal Thorum Duet

Neethane Naal Thorum Duet Song Lyrics In English


ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே

உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்

எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்

எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்

நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்


நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ

வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ

எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே

அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்

நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்