Neeyindri Yaarumullai

Neeyindri Yaarumullai Song Lyrics In English


நீயின்றி யாருமில்லை
வழி காட்டு முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு
நீயின்றி யாருமில்லை
வழி காட்டு முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு

நம்பிக்கை கொண்டு வந்தேன்
அருள் கேட்டு நீ
ஞானக்கண் தனைத் திறந்து
வழி காட்டு
நம்பிக்கை கொண்டு வந்தேன்
அருள் கேட்டு நீ
ஞானக்கண் தனைத் திறந்து
வழி காட்டு

அருளே அருளே
உலகம் உனதல்லவா
அறிவும் பொருளும்
யாவும் நீயல்லவா

நீயின்றி யாருமில்லை
வழி காட்டு முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு
நீ ஒளி காட்டு

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ


கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ
நாங்கள் கதிர்காமம்
நாங்கள் கதிர்காமம்
வந்ததற்குப் பலன் இல்லையோ

காசி விசாலாட்சி
உந்தன் மகனிடம் சொல்வாய்
காஞ்சி காமாட்சி
உந்தன் மகனிடம் சொல்வாய்
அங்கயற்கண்ணி
உந்தன் மகனிடம் சொல்வாய்
அடி அபிராமி நீ உனது
மகனிடம் சொல்வாய்

கண்டேன் கண்டேன்ஏன்ஏன்ஏன்
கண்டேன்
முத்துக் குமரன் பக்திச் சரவணன்
வைத்திய நாதனைக் கண்டேன்
முடியுடை மன்னன் திருமுடி அங்கே
கொடியுடைச் சேவலைக் கண்டேன்
கொத்தும் நாகம் பொல்லாதாக
கத்தும் தோகையைக் கண்டேன்
கோலம் மாறிட ஞானக் கண்களும்
ஊனக் கண்களும் கொண்டேன்

வீடு நமக்குண்டு அறுபடை வீடு
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்
வீடு நமக்குண்டு அறுபடை வீடு
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்
விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்
விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்
ஐயா முருகய்யா
ஐயா முருகய்யா
ஐயா முருகய்யா
ஐயா முருகய்யா