Neeyum Isaiyum |
---|
இசை அமைப்பாளர் : அரவிந்த் மனோ
நீயும் இசையும் இன்றி உலகம்
உலகமில்லையே
காலம் கரைய தூரம் மறைய
காத்துக்கிடக்கிறேன்
ஆயிரம் நாள் நிலவோ
ஓர் நொடியில் அணைந்திட
மீண்டும் இங்கே உதித்திடக்
காத்துக்கிடக்கிறேன்
ஆதி எனவும் அந்தம் எனவும்
உனை நினைத்திருந்தேன்
பாதி வழியின் பிரிவு முடியக்
காத்துக்கிடக்கிறேன்
நட்புக்குள்ளே நட்புக்குள்ளே
அன்று விதைத்த நொடிகளோ
யுகங்களாய் இன்று வளர்ந்து கிடக்க
கனவிலே நீயும் வரைந்த மாளிகை
இசையிலே இங்கு நானும் நிரப்ப
நினைவிலே கிடக்கவா
கனவினை மறந்துவிடவா
வலியிலே வசிக்கவா
உனது பதிலுக்கு நான் காத்துக்கிடக்கிறேன்
காதல் என்று அன்று
நீ சொன்ன நொடியினில்
உடைந்ததே எந்தன்
உலகம் முழுதும்
தூரம் சென்று அதை
யோசிக்கும் பொழுதினில்
குழம்புதே எந்தன்
இளைய மனதும்
தெளியவே இடம் கொடு
அதுவரை பொறுமை கொள்ளடா
கனவினைத் தொடர்ந்திடு
எனது முடிவுக்கு
நான் காத்துக்கிடக்கிறேன்
வானைத் திறந்து எந்தன் நிலவு
மீண்டும் உதிக்குதே
நெஞ்சம் திறந்து என்னுள் நுழைந்து
துள்ளிக் குதிக்குதே
ஓவியமாய் ஒரு நாள்
பாடல் என ஒரு நாள்
தூரிகையும் இசையும்
கூடிக் கலந்ததே
பூமி முழுதும் காதல் பெருகி
வழியுது உயிரே
வாழ்க்கை எழுதும் எழுதுகோலில்
இன்பம் நிறையுதே