Nenjathile Nee Netru Vandhaai

Nenjathile Nee Netru Vandhaai Song Lyrics In English


நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட
ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது நிம்மதி ஏது

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்


லலால லா
லலால லா
லலால லா
லலால லா
லலால லாலாலா

காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக

காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம் போலாட
நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்