Nenjathile Nee Netru Vandhaai |
---|
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட
நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட
ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது நிம்மதி ஏது
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
லலால லா
லலால லா
லலால லா
லலால லா
லலால லாலாலா
காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம் போலாட
நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்