Nenjil Ulla Kaayam |
---|
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது
பூஜைக்கான தேவனே பூவில் ஏறி ஆடினால் பூஜை செய்யும் யாருமே கோபம் கொள்ளல் நீதியே சொந்தம் கொண்ட எந்தன் தேவி சொன்ன வார்த்தை நியாயமே புனிதம் நீரில் வந்ததே நதியின் மூலம் அல்லவா
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது
தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால் வேறு சாட்சி வேண்டுமோ மனிதன் பாவம் செய்தால் மனதுதானே சாட்சியம்
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது
தாயில்லாத பிள்ளையாய் தனிமை கொண்ட செல்வமே தாயில்லாத பிள்ளை நீ வாயில்லாத கணவன் நான்
இன்று நாளை என்று வாழ்வோம் நல்ல நாளை தேடுவோம் உனது தந்தை ஆசையே உனது காலம் வெல்வதே
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது