Nenjodu Nenjam Thoodhu |
---|
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ
அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல
எங்கும் நடை போடுவாள்
ஆசை முகம் பார்த்து பேசும் விழியோடு
என்றும் உறவாடுவாள்
நல்ல வருங்காலம் நாளை வருமென்று
சொல்லி எனைத் தேற்றுவாள்
நாளும் எனக்காக வாழ்த்து கவி பாடி
வந்து வழிக் காட்டுவாள்
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
வானில் விளையாடும் நீல மணி மேகம்
அன்னை அருளல்லவா
பாசமலர் சோலை காட்டும் எழிற்கோலம்
அன்பு முகம் அல்லவா
யாரும் உறவென்று எண்ணும் மனம் ஒன்று
அன்னை அவள் தந்தது
ஊரும் அவள் இந்த உலகம் அவள்
பிள்ளை மனம் சொன்னது
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ