Nenjodu Nenjam Thoodhu

Nenjodu Nenjam Thoodhu Song Lyrics In English


நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்

நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ

அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல
எங்கும் நடை போடுவாள்
ஆசை முகம் பார்த்து பேசும் விழியோடு
என்றும் உறவாடுவாள்

நல்ல வருங்காலம் நாளை வருமென்று
சொல்லி எனைத் தேற்றுவாள்
நாளும் எனக்காக வாழ்த்து கவி பாடி
வந்து வழிக் காட்டுவாள்

நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்


வானில் விளையாடும் நீல மணி மேகம்
அன்னை அருளல்லவா
பாசமலர் சோலை காட்டும் எழிற்கோலம்
அன்பு முகம் அல்லவா

யாரும் உறவென்று எண்ணும் மனம் ஒன்று
அன்னை அவள் தந்தது
ஊரும் அவள் இந்த உலகம் அவள்
பிள்ளை மனம் சொன்னது

நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ