Nenjukku Neethi Undu |
---|
அய்யனாரே அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
கண்ணால் கண்டால் முன்னால் நின்று
கருணை வழங்கும் ஐயாவே நல்ல
கருணை வழங்கும் ஐயாவே
நல்ல கருணை வழங்கும் ஐயாவே
கையால் வணங்கி உள்ளம் உருகி
கனிந்து நின்றோம் ஐயாவே
உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
பொட்டோடு பூவோடு வாழ
நாங்கள் வாழ
உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
இலையிலே பூவெடுத்து
உடலிலே அலகு குத்தி
தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
எண்ணிய எண்ணம் நடந்து விட்டால்
ஐயா உனக்கு இடமில்லை
ஐயா உனக்கு இடமில்லை
இளைத்தவர்கள் விழுந்து விட்டால்
உனது விளக்கில் ஒளியில்லை
உனது விளக்கில் ஒளியில்லை
புண்ணியம் எல்லாம் தோற்று விட்டால்
கோவிலுக்குப் பொருளில்லை
கோவிலுக்குப் பொருளில்லை
பொய்யில்லாத மெய்யனாரே
பூமி காக்கும் அய்யனாரே
பொய்யில்லாத மெய்யனாரே
பூமி காக்கும் அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே