Nerana Nedunsalai

Nerana Nedunsalai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

நேரான நெடுஞ்சாலை
ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு
கூறாகப் பிரிந்தவை வேறிடத்தில் வந்து
நேராக இணைவதுண்டு

தாயெனும் சுமைதாங்கி
தான் சுமந்த மழலையை
தாளாது இறக்கி வைத்தாள்
தாளாது இறக்கி வைத்தாள்

காதலெனும் சுமைதாங்கி
கண்ணீரில் வாழ்ந்தவன்
களிப்புடன் ஏற்றுக் கொண்டான்
களிப்புடன் ஏற்றுக் கொண்டான்


இன்னொருவர் நலங்காக்கும்
தியாகமும் சீலமும்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை

இழந்ததோர் சிப்பியில்
வெளிவந்த முத்தினை
என் மகள் என்றழைத்தான்
இதயத்தில் எழுதினான்

இழந்ததோர் சிப்பியில்
வெளிவந்த முத்தினை
என் மகள் என்றழைத்தான்
என் மகள் என்றழைத்தான்
இதயத்தில் எழுதினான்
இளஞ்செல்வி வாழ்விலோர்
எதிர்காலம் எழுதுகிறான்
எதிர்காலம் எழுதுகிறான்ஆஆ ஓஓ