Neruppu Vaayinil |
---|
நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
கத்தி கண்ணின் இருபுறம் தெரியும்
நடக்கும் நடையில் வருபவன் புரியும்
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்
ஹஹாஹஹாஹ்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
வேரோடு சாயும்
இந்த காடே தரையாகும்
எதிராளி பார்க்கிறான்
தெருவோரம் நிக்கிறான்
மார்க்கெட்டில் முறைக்கிறான்
என்னை போட்டு தள்ள துடிக்கிறான்
எங்கேயும் வருகிறான்
எமனாக தொடர்கிறான்
முகம் மாத்தி அலைகிறான்
என் கண்கள் பார்த்தால் மறைக்கிறான்
அவன் முந்துவானா
நான் முந்துவேனா
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்
உடையும் மேகம் மழையாய் பொழியும்
உதிக்கும் பந்து வேகமாய் போகும்
ஹஹாஹஹாஹ்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
மண்ணில் உள்ள பெண்கள்
கை கோர்த்து உடல் தின்னும்
ஒரு கண்ணில் தூங்கிடு
மறு கண்ணை திறந்திரு
ஓய்வாக படுப்பது
ஹஹஹா அது கல்லறையில் கிடைப்பது
போகின்ற பாதைகள்
பல பேரும் போனது
புதிதாக பிறந்திட
நாம் புத்தன் இல்லை வழி விடு
இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர்தான் வணங்குமா
காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே கல்லடி கிடைக்கும்
ஹஹாஹஹாஹ்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்