Neruppu Vaayinil

Neruppu Vaayinil Song Lyrics In English


நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
கத்தி கண்ணின் இருபுறம் தெரியும்
நடக்கும் நடையில் வருபவன் புரியும்
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்

ஹஹாஹஹாஹ்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
வேரோடு சாயும்
இந்த காடே தரையாகும்

எதிராளி பார்க்கிறான்
தெருவோரம் நிக்கிறான்
மார்க்கெட்டில் முறைக்கிறான்
என்னை போட்டு தள்ள துடிக்கிறான்
எங்கேயும் வருகிறான்
எமனாக தொடர்கிறான்
முகம் மாத்தி அலைகிறான்
என் கண்கள் பார்த்தால் மறைக்கிறான்

அவன் முந்துவானா
நான் முந்துவேனா
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்
உடையும் மேகம் மழையாய் பொழியும்
உதிக்கும் பந்து வேகமாய் போகும்

ஹஹாஹஹாஹ்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
மண்ணில் உள்ள பெண்கள்
கை கோர்த்து உடல் தின்னும்


ஒரு கண்ணில் தூங்கிடு
மறு கண்ணை திறந்திரு
ஓய்வாக படுப்பது
ஹஹஹா அது கல்லறையில் கிடைப்பது
போகின்ற பாதைகள்
பல பேரும் போனது
புதிதாக பிறந்திட
நாம் புத்தன் இல்லை வழி விடு

இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர்தான் வணங்குமா
காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே கல்லடி கிடைக்கும்

ஹஹாஹஹாஹ்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்