Netri Kungumam |
---|
நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ ஒற்றை
திங்கள் உன்னை சேர
இங்கொரு பிறவி எடுத்தேனோ
ஊனில் ஊரும் உயிரெனவே
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்
என் காதல்
தந்தவன் நீயே என்
உயிரில் கலந்தவன்
தானே உன் துணையாய்
வருவேன் நானே
உன் மனதை
வென்றவள் நானே உன்
நிழலாய் தொடர்பவள்
தானே என் வாழ்வின்
தேடல் நீயே
மழைக்கேங்கிய
பூமியும் நானே முதல்
மழையாய் நனைத்தவள்
நீயே உன் அன்பில் கரைந்தே
போனேன் ஹம்ம்
உயிர் ஈரமாக மனம் ஓரமாக
நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்
என் காதல்
தந்தவள் நீயே என்
உயிரில் கலந்தவள்
தானே உன் துணையாய்
வருவேன் நானே
நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ
ஒற்றை திங்கள்
உன்னை சேர இங்கொரு
பிறவி எடுத்தேனோ ஊனில்
ஊரும் உயிரெனவே உன்னோடு
உனக்குள்ளே வாழ்வேன்
தொலைவினில்
எரியும் மலை விளக்கொளியாய்
தெரிந்திடும் உன் முகம்
அலையினில்
தவழும் இலை என
நாளும் மிதந்திடும்
என் மனம்
மழையில் நனையும்
மழலை போலே என் நெஞ்சம்
ஆடும் அங்கும் இங்குமே
தலையை கோதும்
தலைவன் நீயே உன்னாலே
பொங்கும் இன்பமே
என் தனிமையில்
உன்னை தந்தாய் உறவாகவே
நீயும் வந்தாய்
ஆண் & இரு
இதயங்கள் சேர்ந்திடும்
நேரம் சொர்கம் எங்கும்
காதல் சங்கீதம்
ச ச ரி ம ப
ப த ம ரி ரி ம க ரி
ச நீ த நீ ச
ச ரி ரி ம ம ம ரி
ம ப த ம ப ச ச ப
நீ த ம க ரி ச