Netri Kungumam

Netri Kungumam Song Lyrics In English


நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ ஒற்றை
திங்கள் உன்னை சேர
இங்கொரு பிறவி எடுத்தேனோ
ஊனில் ஊரும் உயிரெனவே
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்

என் காதல்
தந்தவன் நீயே என்
உயிரில் கலந்தவன்
தானே உன் துணையாய்
வருவேன் நானே

உன் மனதை
வென்றவள் நானே உன்
நிழலாய் தொடர்பவள்
தானே என் வாழ்வின்
தேடல் நீயே

மழைக்கேங்கிய
பூமியும் நானே முதல்
மழையாய் நனைத்தவள்
நீயே உன் அன்பில் கரைந்தே
போனேன் ஹம்ம்
உயிர் ஈரமாக மனம் ஓரமாக
நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்

என் காதல்
தந்தவள் நீயே என்
உயிரில் கலந்தவள்
தானே உன் துணையாய்
வருவேன் நானே

நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ

ஒற்றை திங்கள்
உன்னை சேர இங்கொரு
பிறவி எடுத்தேனோ ஊனில்
ஊரும் உயிரெனவே உன்னோடு
உனக்குள்ளே வாழ்வேன்

தொலைவினில்
எரியும் மலை விளக்கொளியாய்
தெரிந்திடும் உன் முகம்


அலையினில்
தவழும் இலை என
நாளும் மிதந்திடும்
என் மனம்

மழையில் நனையும்
மழலை போலே என் நெஞ்சம்
ஆடும் அங்கும் இங்குமே

தலையை கோதும்
தலைவன் நீயே உன்னாலே
பொங்கும் இன்பமே

என் தனிமையில்
உன்னை தந்தாய் உறவாகவே
நீயும் வந்தாய்

ஆண் & இரு
இதயங்கள் சேர்ந்திடும்
நேரம் சொர்கம் எங்கும்
காதல் சங்கீதம்

ச ச ரி ம ப
ப த ம ரி ரி ம க ரி
ச நீ த நீ ச
ச ரி ரி ம ம ம ரி
ம ப த ம ப ச ச ப
நீ த ம க ரி ச