Nikkattumaa Pogattuma

Nikkattumaa Pogattuma Song Lyrics In English


நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி

சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே

ஆஆஆஆ
ஆஆஆஆ

ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப்போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன

தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே
ஒரு சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா

சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே
தாவணி போய் சேலை வரும்
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே




ராத்திரி நேரத்திலே
ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று
ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது போல்
என் உள்ளமும் பூத்ததடி

அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மனக் கோவிலிலே
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள்வருமா

நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
சோலை கருங்குயிலே
சோலை கருங்குயிலே