Nil Angey |
---|
நில் அங்கே
நில் அங்கே நில் அங்கே நில் அங்கே
என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்
என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்
இனி அவள் உள்ளம் துடித்திடும் வேளை
எங்கே நிற்கின்றாய்ஆஆஆஅஆஅஅஆய்
எங்கே செல்கின்றாய்
கருணையுடன் தாலி
கழுத்தை தழுவி நிற்கும்
கைகளில் பொன் வளைகள்
காரிகையைத் தழுவும்
ஆடை அவள் அழகை
அன்போடு தழுவி நிற்கும்
அறிவிருந்தும் உன்னிடத்தில்
அந்தக் கருணை சிறிதும் இல்லை
எங்கே செல்கின்றாய்
உண்பதற்கு தந்தாலும்
உடை உடுத்தி விட்டாலும்
அள்ளிக் கொடுத்தாலும்
அர்ச்சனைகள் செய்தாலும்
அத்தனைக்கும் மேலே
பத்தினிக்குத் தேவையொன்று
அறியாயோஅறியாயோ படித்திருந்தும்
அறியும் உள்ளம் உனக்கில்லையோ
எங்கே செல்கின்றாய்
அல்லும் பகலும்
அருகே துணையிருந்து
சொல்லால் உடலால் உயிரால்
சுவை கொடுத்து
செல்லும் வரையிலும் சேர்ந்திருக்கும்
பெருமையைத்தான்
தியாகம் என்பார்
மாலை மட்டும் சூட்டிவிட்டால்
தியாகியாக முடியுமா
எங்கே செல்கின்றாய்
என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்
கண்ணிழந்த மங்கைக்குக்
கண்ணீர் பெருக்கெடுத்தால்
கணப் பொழுதில் உன் தியாகம்
கருகி விடும் மறவாதே
மூடிக் கிடக்கின்ற மனக் கதவைத்
திறந்து விடு
திறந்து கிடக்கின்ற
கதவுகளை மூடி விடு
மனங்குளிரப் பாடி விடு
மங்கைக்கு வாழ்வு கொடு
மனித வடிவினிலே
தெய்வமாய் மாறி விடு