Nil Angey

Nil Angey Song Lyrics In English


நில் அங்கே
நில் அங்கே நில் அங்கே நில் அங்கே
என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்
என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்

இனி அவள் உள்ளம் துடித்திடும் வேளை
எங்கே நிற்கின்றாய்ஆஆஆஅஆஅஅஆய்
எங்கே செல்கின்றாய்

கருணையுடன் தாலி
கழுத்தை தழுவி நிற்கும்
கைகளில் பொன் வளைகள்
காரிகையைத் தழுவும்
ஆடை அவள் அழகை
அன்போடு தழுவி நிற்கும்
அறிவிருந்தும் உன்னிடத்தில்
அந்தக் கருணை சிறிதும் இல்லை
எங்கே செல்கின்றாய்

உண்பதற்கு தந்தாலும்
உடை உடுத்தி விட்டாலும்
அள்ளிக் கொடுத்தாலும்
அர்ச்சனைகள் செய்தாலும்
அத்தனைக்கும் மேலே
பத்தினிக்குத் தேவையொன்று
அறியாயோஅறியாயோ படித்திருந்தும்
அறியும் உள்ளம் உனக்கில்லையோ
எங்கே செல்கின்றாய்

அல்லும் பகலும்
அருகே துணையிருந்து
சொல்லால் உடலால் உயிரால்
சுவை கொடுத்து
செல்லும் வரையிலும் சேர்ந்திருக்கும்
பெருமையைத்தான்
தியாகம் என்பார்
மாலை மட்டும் சூட்டிவிட்டால்
தியாகியாக முடியுமா
எங்கே செல்கின்றாய்


என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்
எங்கே செல்கின்றாய்

கண்ணிழந்த மங்கைக்குக்
கண்ணீர் பெருக்கெடுத்தால்
கணப் பொழுதில் உன் தியாகம்
கருகி விடும் மறவாதே
மூடிக் கிடக்கின்ற மனக் கதவைத்
திறந்து விடு
திறந்து கிடக்கின்ற
கதவுகளை மூடி விடு

மனங்குளிரப் பாடி விடு
மங்கைக்கு வாழ்வு கொடு
மனித வடிவினிலே
தெய்வமாய் மாறி விடு