Nil Nil Nil Ilanthendrale |
---|
நில் நில் நில் இளந்தென்றலே
சொல் சொல் சொல் ஒரு பாடலே
எங்கள் சோலை என்றும் மலர
எந்த நாளும் இன்பம் வளர
மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
லாலாலலலலலல்லா
நில் நில் நில் இளந்தென்றலே
சொல் சொல் சொல் ஒரு பாடலே
உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன்
உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன்
அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன்
இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன்
எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம்
நீதானே தந்தது கல்யாண மங்கலம்
பனி வாய் மலரே பிரியா உறவே
நில் நில் நில் இளந்தென்றலே
சொல் சொல் சொல் ஒரு பாடலே
எங்கள் சோலை என்றும் மலர
எந்த நாளும் இன்பம் வளர
மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
லாலாலலலலலல்லா
மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு
மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு
பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி
ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி
உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம்
பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்
அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும்
நில் நில் நில் இளந்தென்றலே
சொல் சொல் சொல் ஒரு பாடலே
எங்கள் சோலை என்றும் மலர
எந்த நாளும் இன்பம் வளர
மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
இருவர் : லாலாலலலலலல்லா
ல ல ல லாலா லாலா லா (2)