Nilavu Paatu |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
கனவுகள் வருவது
விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது
கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம்
இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை
வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
நிலவொன்று நடந்தது
சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது
இசை என்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை
யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள்
யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம்
மயக்குது இசையென்னும் அதிசயம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்