Nillatha Vennila |
---|
நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி
நில்லாமலேநீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்
நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்
மான் துள்ளும் மலையாளத்தின்
எழில் சித்திரமே சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட
நன்னிலமே நன்னிலமே
கேரளக் குயில் கூவிடும் இசை
தித்தித்ததோதித்தித்ததோ
ஆவணி திருவோணத்தில் உன்னை
சந்தித்ததோசந்தித்ததோ
பொன்னல்லோ சிறு பூவல்லோ
மெல்ல தொடவோ என்னைத் தரவோ
தேனல்லோ பசும்பாலல்லோ
பக்கம் வரவோ நான் தரவோ
செம்மீன்கள் துள்ளுதே
இங்கும் அங்கும் கண் ஓடையில்
சந்தோஷம் பொங்குதே
முன்னும் பின்னும் உன் கூடலில்
நான்சொல்லவோ
சின்ன பூவல்லவோ
நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி
நில்லாமலேநீ போவதேன்
சொல்லாமலேநான் நோவதேன் ஏன்
நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி
நீ வர எதிர்ப்பார்த்தது
இந்த நந்தவனம் நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது
இந்த செங்கமலம் செங்கமலம்
காமனின் கலைக் காண்பது
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்
பூமரக் குயில் கூவுது
இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்
மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ
உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ
அன்றாடம் சேர்வது
மன்னா மன்னா உன் பொன்மடி
எந்நாளும் இன்பமே
நீயே நீயே என் பைங்கிளி
பூமங்கையேபொங்கிடும் கங்கையே
நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்
நில்லாமலேநீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்
நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்