Ninaikatha Neram Illai Unnai (Female) |
---|
ஆஅஆஆஅஆஅ
ஆஅஆஆஅஆஅ
ஆஆஅஆ
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பூ முகம் வாடி இங்கே
உன்னை எதிர்பார்க்கும்ம்ம்ம்
புன்னகை மன்னனுக்கே
மாலைகளை கோர்க்கும்ம்ம்ம்
ஆசைகளை தூது விட்டு
அன்புக் கரம் கேட்கும்
கண் இரண்டும் உன்னை
எதிர் பார்த்து நிதம் பூக்கும்
ஆணழகே மனம்
தொடும் பேரழகே
வா அருகே அமுதெனை நீ பருக
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
ஆடிடும் நீரலைகள்
உன் பெயர் கூறும்ம்ம்ம்
கூவிடும் குயிலினங்கள்
உன் புகழ் பாடும்ம்ம்ம்
வானில் வரும் வெண்ணிலவும்
என்னை தினம் வாட்டும்
தேனுலவும் தென்றல் வந்து
என் உடலை மீட்டும்
கானக் குயில்
தனிமையில் ஏங்குதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை